மெளன ஊர்வலங்கள், மோட்ச தீபங்கள், கடை அடைப்புகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கும்பகோணத்தில் 90 குழந்தைகள் பரிதாபமாக இறந்த சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறுபகுதிகளில் கோவில்களில் மோட்ச தீபங்கள் ஏற்றப்பட்டன. இதுதவிர அமைதி ஊர்வலங்களும், கடைஅடைப்புகளும் நடந்த வண்ணம் உள்ளன.

90 பேரை பலி கொண்டுவிட்டு அமைதியாக நிற்கும் கிருஷ்ணா பள்ளி முன்பிருந்து நேற்று அமைதி ஊர்வலம்தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். பின்னர் நடந்த இரங்கல் கூட்டத்தில் பலரும்உருக்கமாகப் பேசினர்.

சம்பவம் நடந்த இடத்தில் தமிழக அரசு நினைவுப் பூங்கா அமைக்க வேண்டும் என்று கூட்டத்தில் பேசியவர்கள்கோரிக்கை விடுத்தனர். இதற்காக ஆகும் செலவில் ரூ. 5 லட்சம் நிதியை கும்பகோணம் மக்களே கொடுக்கத்தயாராக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த ஆண்டு எந்தப் பண்டிகையையும் கொண்டாடப் போவதில்லை என்றும் கும்பகோணம் மக்கள்சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை, தருமபுரி ஆதீன மடங்களில் மோட்ச தீபம் ஏற்றி இறந்த குழந்தைகளின் ஆத்மா சாந்தி அடையபிரார்த்திக்கப்பட்டது. இதேபோல, மேலூர் அருகே உள்ள சொக்கம்பட்டியில் தீபம் ஏற்றி அக்கிராமத்தினர் அஞ்சலிசெலுத்தினர்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் மெளன ஊர்வலம்நடந்தது. காந்தி மண்டபத்தில் சர்வமத வழிபாடு நடத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் நேற்று கடை அடைப்பு நடத்தி இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.அமைதி ஊர்வலம் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டது.

தமிழகத்தைத் தாண்டி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள்மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+