சென்னை வக்கீல்கள் மீண்டும் போராட்டம்
சென்னை:
மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு அதிக மாவட்டங்களை ஒதுக்கக் கூடாது, கிளை திறப்பை தள்ளி வைக்கவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று முதல் மீண்டும் காலவரையற்றவேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.
வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரன் தலைமையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் கூடிய வழக்கறிஞர்கள்கும்பகோணம் தீவிபத்தில் இறந்த குழந்தைகளுக்கு நினைவாக 2 நிமிட நேரம் மெளன அஞ்சலி செலுத்தினர்.பின்னர் பிரபாகரன் தலைமையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் மெளன ஊர்வலத்தையும் வழக்கறிஞர்கள் நடத்தினர். இதைத் தாேெடர்ந்துபிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில் இன்று கும்பகோணம் குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகஆர்ப்பாட்டம் எதையும் நடத்தவில்லை.
நாளை கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தைத் தொடரவுள்ளோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரைபோராடுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications