மரண தண்டையிலிருந்து தப்புவாரா இந்தியர்?
பாங்காக்:
போதைப் பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட உத்தரப் பிரதேச வாலிபரின்தண்டனையைக் குறைக்குமாறு இந்தோனேஷிய அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
1995ம் ஆண்டு அயோத்ய பிரசாத் செளபே என்ற அந்த நபர் 12 கிலோ ஹெராயினைஇந்தோனேஷியாவுக்குக் கடத்தியபோது அந் நாட்டு போலீசாரிடம் பிடிபட்டார்.
நீண்ட நாட்கள் நடந்த இந்த வழக்கு விசாரணையின் இறுதியில், அவரை சுட்டுக் கொல்ல அந் நாட்டுநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதையடுத்து அயோத்ய பிரசாத்தைக் காக்குமாறு மத்திய அரசுக்கு பல்வேறு அமைப்புகள்கோரிக்கை விடுத்தன. இதைத் தொடர்ந்து இந்தோனேஷியாவுக்கான இந்தியத் தூதர் மாத்தூர், அந்நாட்டு அட்டர்னி ஜெனரலுக்குக் கடிதம் எழுதி, பிரசாத்தின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறுகோரினார்.
ஆனால், இது தொடர்பாக இந்தோனேஷிய அரசு இறுதி முடிவு ஏதும் எடுக்காத நிலையில், பிரசாத்தைவரும் 25ம் தேதி சுட்டுக் கொல்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications