அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சோனியா அஞ்சலி
கும்பகோணம்:
கும்பகோணம் தீவிபத்தில் இறந்த சோனியா, பிரியங்கா என்ற இரு குழந்தைகளை அடக்கம் செய்த இடத்திற்குகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்று அஞ்சலி செலுத்தினார்.
கும்பகோணம் வந்திருந்த சோனியா பலியான குழந்தைகளின் பெற்றோர்களை அவர்களது வீடுகளில் சந்தித்துஆறுதல் கூறினார். அப்போது, இந்திரா காந்தி குடும்பத்தார் மீது அதிக பிரியம் கொண்ட சொக்கலிங்கம்,பழனியம்மாள் தம்பதியின் வீட்டிற்குச் சென்றார்.
இவர்களது இரண்டு மகள்கள் சோனியாவும், பிரியங்காவும் தீவிபத்தில் பலியாகிவிட்டனர். சோனியாவைப்பார்த்ததும்,
உங்கள் குடும்பத்தின் மீது எங்களுக்கு பாசம் அதிகம், அதனால்தான் உங்களது குடும்பப் பெயர்களை எங்களதுகுழந்தைகளுக்கு வைத்தேன். இன்று சோனியாவையும், பிரியங்காவையும் உங்களுக்கு காட்ட முடியவில்லையேஎன்று பழனியம்மாள் கதறியபோது, சோனியா காந்திக்கு கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.பழனியம்மாளை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார்.
பின்னர் சோனியாவும், பிரியங்காவும் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications