குடந்தையில் அத்வானி, ரூ.25 லட்சம் நிவாரணம்
சென்னை:
கும்பகோணத்தில் தீவிபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முன்னாள் துணைப் பிரதமர் அத்வானிஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி செய்வதாக பாஜக தலைவர்வெங்கையா நாயுடு அறிவித்தார்.
கும்பகோணம் செல்வதற்காக நேற்று இரவு சென்னை வந்த அத்வானியும், வெங்கையா நாயுடுவும், இன்று காலைதிருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கும்பகோணம் சென்றனர்.
பின்னர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களைப் பார்வையிட்டு அவர்களது பெற்றோருக்குஆறுதல் கூறினர். விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்களையும் அவர்கள் ஆறுதல்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அத்வானி பேசுகையில், தமிழக அரசு அமைத்துள்ள நீதிக் கமிஷனின் அறிக்கைக்குப்பிறகு தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் பள்ளிக் கூடங்களின்பாதுகாப்புக்கு மாநில அரசுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.
உடன் இருந்த வெங்கையா நாயுடு பேசுகையில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்காக நாடு தழுவிய அளவில்விதிமுறைகள், கோட்பாடுகள் வகுக்கப்பட வேண்டும். பாஜக சார்பில் இறந்ததோரின் குடும்பங்களுக்கு ரூ. 25லட்சம் நிதியுதவி அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
-
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications