குடந்தையில் அத்வானி, ரூ.25 லட்சம் நிவாரணம்
சென்னை:
கும்பகோணத்தில் தீவிபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முன்னாள் துணைப் பிரதமர் அத்வானிஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி செய்வதாக பாஜக தலைவர்வெங்கையா நாயுடு அறிவித்தார்.
கும்பகோணம் செல்வதற்காக நேற்று இரவு சென்னை வந்த அத்வானியும், வெங்கையா நாயுடுவும், இன்று காலைதிருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கும்பகோணம் சென்றனர்.
பின்னர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களைப் பார்வையிட்டு அவர்களது பெற்றோருக்குஆறுதல் கூறினர். விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்களையும் அவர்கள் ஆறுதல்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அத்வானி பேசுகையில், தமிழக அரசு அமைத்துள்ள நீதிக் கமிஷனின் அறிக்கைக்குப்பிறகு தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் பள்ளிக் கூடங்களின்பாதுகாப்புக்கு மாநில அரசுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.
உடன் இருந்த வெங்கையா நாயுடு பேசுகையில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்காக நாடு தழுவிய அளவில்விதிமுறைகள், கோட்பாடுகள் வகுக்கப்பட வேண்டும். பாஜக சார்பில் இறந்ததோரின் குடும்பங்களுக்கு ரூ. 25லட்சம் நிதியுதவி அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications