நீதிமன்ற புறக்கணிப்பை புறக்கணித்த திமுக
சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பில் திமுகவைச்சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளவில்லை.
மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீண்டும்காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில், திமுக தலைமைக் கழக அலுவலகமான அண்ணா அறிவாலயம் தொடர்பான வழக்கு விசாரணைக்குவந்தது. இந்த வழக்கில் திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சுமார் 12 பேர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின்போது அதை கைவிட்டு விட்டு திமுக வழக்கறிஞர்கள் நீதிமன்ற நடவடிக்கையில் பங்கேற்றது,போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களை கோபப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சங்கத் தலைவர் பிரபாகரன் கூறுகையில், திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போராட்டத்தைபுறக்கணித்து விட்டு நீதிமன்ற நடவடிக்கையில் பங்கேற்றுள்ளதாக எனக்கு புகார் வந்துள்ளது. திமுகவழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல வழக்கறிஞர்களும் கோரியுள்ளனர். அவர்கள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
மதுரை கிளை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பிரபாகரன் உதவிகோரியது நினைவு கூறத்தக்கது.












Click it and Unblock the Notifications