For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேலும் 4 அதிகாரிகள் கைது

By Staff
Google Oneindia Tamil News

கும்பகோணம்:

கும்பகோணம் தீவிபத்து தொடர்பாக மேலும் 4 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீவிபத்து தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணாபள்ளிக்கு கடந்த 1997ம் ஆண்டு அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்டபோது அதற்கான உத்தரவை அப்போதைய கூடுதல்உதவி கல்வி அதிகாரி பாலகிருஷ்ணன் என்பவர் வழங்கியுள்ளார். பாலகிருஷ்ணன் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். ஓய்வுக்குப் பின் தஞ்சை மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தலைமைஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

கும்பகோணம் சம்பவத்திற்குப் பிறகு பாலகிருஷ்ணன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடிவந்தனர். இந் நிலையில் விருதுநகரில் தனது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

இந் நிலையில் மேலும் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஓய்வு பெற்ற மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலர் பாலாஜி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், அதே அலுவலககண்காணிப்பாளர் தாண்டவன், தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ் ஆகியோரைகும்பகோணம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவரையும்ம் சேர்த்து கைதானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X