ஜோர்டன் இளவரசர் இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கும்பகோணம் தீவிபத்தில் 93 குழந்தைகள் இறந்ததற்கு ஜோர்டன் நாட்டு இளவரசர் ஹசன் பின் தலால் மற்றும்இளவரசி சர்வாத் ஹசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
கும்பகோணம் தீவிபத்து தொடர்பாக ஜோர்டன் நாட்டு இளவரசரும், இளவரசியும் அனுப்பியுள்ள இரங்கல்கடிதம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு வந்துள்ளது. அங்கிருந்து இந்தக் கடிதம் ஜெயலலிதாவுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில், தீவிபத்தில் சிக்கி பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து வேதனையுற்றோம்.எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை உங்களுக்கும், உங்களது அரசுக்கும், மக்களுக்கும் வேதனையான இந்தஅனுதாபச் செய்தியை அனுப்பி வைக்கிறோம்.
துயரம் நிறைந்த இந்த நேரத்தில் உங்களோடு இணைந்து நாங்களும் இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என்றுகூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications