மதுக்கடைகளுக்கு எதிராக பாமக போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆகஸ்ட் 15ம் தேதி தமிழக அரசின் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு பூட்டுப் போடும்போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மதுக் கடைகளால் மக்களின் எதிர்கால வாழ்க்கையை சீரழிக்காமல்மதுக் கடைகளை தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும். இதனால் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதைவலியுறுத்தும் வகையில், சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் மதுக்கடைகளுக்குப் பூட்டுப் போட்டுப் போராட்டம் நடத்தபாமக மகளிர் அணி முடிவு செய்துள்ளது.
பாமக சார்பில் கும்பகோணம் தீவிபத்தில் 90 குழந்தைகள் இறந்ததற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில்தமிழகத்தின் அனைத்து சட்டசபைத் தொகுதிகளிலும் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார் மணி.












Click it and Unblock the Notifications