11 அரசு வழக்கறிஞர்கள் அதிரடி பணி நீக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்குகளை நடத்தி வந்த 11 அரசு வழக்கறிஞர்கள் பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஸ்ரீதரன், சத்தியமூர்த்தி, சிவசண்முகம், முரளீதரன், ராஜசேகரன், சுவாமி, மூர்த்தி, சந்திரசேகரன், ராஜசேகரன்,பழனிச்சாமி, தேன்மொழி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசின் வரி விதிப்பு தொடர்பான வழக்குகளில் ஆஜராக வழக்கறிஞர்கள் ரத்தினவேல், சுரேஷ் விஸ்வநாதன்ஆகியோரும் கூடுதல் அரசு வழக்கறிஞர்களாக வெங்கடேஷ், சந்திரசேகரன், கார்த்திகேயன், செந்தில்நாதன்ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பர் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications