கோளாறு: சென்னைக்கு திரும்பி வந்த விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்ட அலையன்ஸ் ஏர் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால்அந்த விமானம் மீண்டும் சென்னையில் தரையிறங்கியது.
சுமார் 80 நிமிடங்கள் வானில் பறந்த பின் அந்த விமானம் திரும்பி வந்துவிட்டது.
67 பயணிகளுடன் இன்று காலை 6 மணிக்குப் புறப்பட்ட அந்த போயிங் விமானம், வழியில் சிலதொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால், உடனடியாக சென்னைக்கே திரும்பியது.
7.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது.
இப்போது பழுது நீக்கப்பட்டு வரும் அந்த விமானம் மாலையில் கொல்கத்தா கிளம்பும் என்றுதெரிகிறது. பயணிகள் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அலையன்ஸ் ஏர் நிறுவனம், இந்தியன் ஏர்லைன்சின் துணை நிறுவனமாகும்.












Click it and Unblock the Notifications