மதுரை கிளை திறப்புக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம்
டெல்லி:
மதுரை உயர்நீதிமன்றக் கிளை தொடங்குவதை தடை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளையைத் திறப்பதற்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந் நிலையில் மதுரை கிளை தொடங்குவது தொடர்பாக குடியரசுத் தலைவர்அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து நாளை மதுரையில் கிளை திறப்பு விழா நடைபெறவுள்ளது. கிளையை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி லஹோட்டி திறந்து வைக்கவுள்ளார்.
இந் நிலையில், மதுரை கிளை திறப்பை தடை செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த அரசு என்ற வழக்கறிஞர்உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனு நீதிபதி வரியவா, நீதிபதி மாத்தூர் ஆகியோர் முன்னனிலையில் இன்றுவிசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுரை கிளை தொடர்பான தேதி அறிவிக்கப்பட்டு அதுதொடர்பான பணிகளும்தொடங்கி விட்டன. குடியரசுத் தலைவர் அறிவிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது. இந் நிலையில் மதுரை கிளைதிறப்பை தடை செய்ய முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
இதன் மூலம் மதுரை கிளை திறப்புக்கு இருந்து வந்த கடைசித் தடையும் நீங்கி விட்டது.












Click it and Unblock the Notifications