இறந்தோரின் உடன்பிறப்புகளுக்கு இலவசக்கல்வி
சென்னை:
கும்பகோணம் தீவிபத்தில் இறந்த குழந்தைகளின் உடன் பிறந்தவர்களில் ஒருவருக்கு கல்லூரிப் பட்டப் படிப்புவரை இலவசமாக கல்வி அளிக்கப் போவதாக காஞ்சி சங்கராச்சாரியார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கும்பகோணம் தீவிபத்தில் பாதிக்கப்ப்ட்ட குடும்பங்களுக்கு காஞ்சி மடத்தின் கும்பகோணம் கிளையின் நிர்வாகிகள்அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்க்கு காஞ்சி மடத்தின் சாஸ்த்ராகல்வி அறக்கட்டளை மூலம் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இறந்த குழந்தைகளின் உடன் பிறந்தவர்களில் ஒருவர்க்கு சாஸ்த்ரா கல்வி நிறுவனம் மூலம் கல்லூரிப்படிப்பு வரை இலவசமாகக் கல்வி அளிக்கப்படும்.
கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தீப்பிடிக்காத கூரை அமைக்க அனைத்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்உதவி செய்ய வேண்டும்.
மேலும் உலக அமைதிக்காகவும், தோஷ நிவர்த்திக்காகவும் வரும் ஜூலை 24-ம் தேதி (நாளை) காலை 7 மணி முதல்8 மணி வரை "ஸ்ரீராம் ஸ்ரீ ராம் என்கிற ஜபத்தை 1008 முறை உச்சரிக்க வேண்டுகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.