மதுரை உயர்நீதிமன்ற கிளை நாளை திறப்பு
மதுரை:
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை நாளை திறக்கப்படுகிறுறது.
மதுரை உலகனேரியில் ரூ. 55 கோடி மதிப்பில் இந்தக் கிளை அமைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 4 மணிக்குநடைபெறும் நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோட்டி கிளையைத் திறந்து வைக்கிறார்.
நிகழ்ச்சியில் மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ், இணை அமைச்சர் வேங்கடபதி, தமிழகத்தைச் சேர்ந்த மத்தியஅமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இதற்கான அழைப்பிதழில் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர்இல்லை.
இதனால் அவர் பங்கேற்பாரா என்று தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியை நடத்துவது மத்திய சட்ட அமைச்சகம்என்பது குறிப்பிடத்தக்கது. சட்டத்துறை இணையமைச்சராக திமுகவின் வேங்கடபதி உள்ள நிலையில்ஜெயலலிதாவின் பெயர் அழைப்பிதழில் விடுபட்டுள்ளது அரசியல்ரீதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில் ஏகப்பட்ட எதிர்ப்புகள், குழப்பங்களைத் தாண்டி, மதுரை கிளை திறப்பு தொடர்பான ஏற்பாடுகள்வேகமாக நடந்து வருகின்றன. கிளை வளாகத்தில் பிரமாண்டமான பந்தலும், மேடையும் போடப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து நான்கு கண்டெய்னர் லாரிகள் மூலம் அனுப்பப்பட்ட வழக்குகளின்கோப்புகள் இன்று அதிகாலை மதுரைக்கு வந்து சேர்ந்தன.
சென்னையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட 123 ஊழியர்களும் பணியில் சேர்ந்து விட்டனர்.
நாளை திறப்பு விழா நடைபெற்றாலும் திங்கள்கிழமை முதல் வழக்கு விசாரணை தொடங்கும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாளை முதலே வழக்குகளைப் பதிவு செய்யலாம் என்று உயர் நீதிமன்ற கிளைபதிவாளர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications