சொத்து குவிப்பு: பொன்முடி விடுதலைக்கு தடை
சென்னை:
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து விழுப்புரம் நீதிமன்றம்அளித்த தீர்ப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த அப்பீல் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். ராமலிங்கம்இத்தடையை விதித்தார்.
1996 முதல் 2001 வரை நடந்த திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்துக்கு அதிகமாகரூ.3.08 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் பொன்முடியின் மனைவி விசாலாட்சி, மாமியார் சரஸ்வதி, நண்பர் மணிவண்ணன், உறவினர்நந்தகோபால் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. நேற்று முன்தினம் அளிக்கப்பட்ட தீர்ப்பில், பொன்முடிஉள்பட அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இத் தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு போலீசார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல்செய்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ராமலிங்கம், விழுப்புரம் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குஇடைக்காலத் தடை விதித்தும், இம்மனுவுக்கு பொன்முடி 3 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்றும்உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications