For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கைக்கு தப்ப முயன்ற 18 அகதிகள் கைது

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:

அகதிகள் முகாமிலிருந்து ராமேஸ்வரத்திற்குத் தப்பி வந்து இலங்கைக்கு படகுகள் மூலம் செல்ல முயன்ற 18அகதிகளை போலீஸார் கைது செய்தனர்.

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் போலீஸார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேன்ஒன்று சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தது.

வேனில் இருந்த ரமேஷ் என்பவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது நெல்லை,புதுக்கோட்டை, புழல் அகதிகள் முகாமிலிருந்து தப்பி வந்துள்ள 18 அகதிகளை படகுகள் மூலம் இலங்கைக்குஅனுப்ப ரமேஷ் உள்ளிட்ட 3 ஏஜென்டுகள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அப்பகுதியில் மறைந்திருந்த 4 பெண்கள், 5 குழந்தைகள் உள்ளிட்ட 18 அகதிகளையும் போலீஸார்கைது செய்தனர். மேலும் ரமேஷ் தவிர கண்ணன், விஜயக்குமார் ஆகிய ஏஜென்டுகளையும் போலீஸார் கைதுசெய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X