கடத்தப்பட்ட 9 மாணவ, மாணவிகள் மீட்பு
சென்னை:
சென்னையிலிருந்து கடத்தப்பட்ட 9 பள்ளி மாணவ, மாணவியரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னை அயனாவரம், குஜ்ஜிபாபு தெருவில் மாநகராட்சிப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்புபடித்து வரும் 4 மாணவர்களும், 5 மாணவிகளும் காணாமல் போயினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது, இந்த 9 பேரும்தங்களுடன் படிக்கும் லீலாவதி என்ற மாணவியின் வீட்டுக்குச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து லீலாவதியின்தாயார் புஷ்பாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது 9 பேரும் வந்துவிட்டுப் போனது உண்மைதான் என்றும் எங்கு போனார்கள் என்று தெரியவில்லைஎன்றும் கூறினார்.
போலீசார் அக்கம் பக்கத்தில் விசாரணை நடத்தியபோது, 9 பேரையும் புஷ்பாவின் உறவுப் பெண்ணான மலர்விழிஇரண்டு ஆட்டோக்களில் அழைத்துச் சென்றதை பார்த்ததாகக் கூறினர்.
இதைத் தொடர்ந்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந் நிலையில் நேற்றிரவு கீழ்பாக்கம்கூடைப்பந்து மைதானத்தின் அருகில் 4 குழந்தைகளும், என்.எஸ்.கே. நகரில் 5 குழந்தைகளும் அழுது கொண்டுநிற்பதாக போலீசாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் தான் தொலைந்துபோன குழந்தைகள் என்று தெரியவந்தது. இதையடுத்து குழந்கைளை டி.பி.சத்திரம் காவல் நிலையத்திற்குபோலீசார் அழைத்துச் சென்றனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, உடன் படிக்கும் லீலாவதியின் வீட்டுக்கு சும்மா தான் போனோம்.அங்கிருந்து திரும்பி வரும்போது மலர்விழி என்ற பெண்ணும், சண்முகம் என்பவரும் எங்களை சுற்றுலா அழைத்துச்செல்வதாகக் கூறி புதுவைக்கு அழைத்துச் சென்றதாகவும், தங்களது நகைகளைப் பறித்துக் கொண்டதாகவும்கூறினர்.
கடத்தல் விவகாரம் பரபரப்பு அடைந்தததால் அச்சமடைந்த மலர்விழியும், சண்முகமும் குழந்தைகளை சென்னைக்குஅழைத்து வந்து இரண்டு ஆட்டோக்களில் ஏற்றி விட்டுத் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீஸார் வலைவீசித் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications