சிபிஐ விசாரிக்க திருமாவளவன் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீவிபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலைசிறுத்தைகள் மாநில அமைப்பாளர் தொல். திருமாவளவன் கூறினார்.
தீவிபத்து கிருஷ்ணா பள்ளியை திருமாவளவன் பார்த்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புற்றீசல்கள் போல் நாள்தோறும் பள்ளிகள் துவக்கப்படுகின்றன. பல பள்ளிகள் சட்டத்துக்குப் புறம்பாக உரிமம்பெற்றுள்ளன. பள்ளிகளுக்கு உரிமம் வழங்கும் விஷயத்தில் உரிய சட்ட திட்டங்கள் பின்பற்றப்பட்டுள்ளனவாஎன்பதை சரிபார்க்க வேண்டும்.
தனியார் பள்ளிகள் நிலவரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மேலும் தமிழகத்தில் தனியார் பள்ளிகளே தேவை இல்லை. அனைத்துப் பள்ளிகளையும் அரசே ஏற்று நடத்தவேண்டும்.
கிருஷ்ணா பள்ளி தீவிபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications