திருவண்ணாமலையில் சாப்ட்வேர் பார்க்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் அருணை பொறியியல் கல்லூரியின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளசாப்ட்வேர் பார்க் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் இதனை துவக்கி வைத்துபேசுகையில்,
உலக சாப்ட்வேர் சந்தையில் இந்திய சாப்ட்வேர் ஏற்றுமதியின் மதிப்பு 1 சதவீதம் தான். வரும்2008ம் ஆண்டில் சாப்ட்வேர் ஏற்றுமதியை 50 பில்லியன் டாலர்களாக உயர்த்த இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது உலக சாப்ட்வேர் சந்தையில் 2.5 சதவீதமாக இருக்கும்.
2003-2004ம் ஆண்டில் சாப்ட்வேர் ஏற்றுமதியின் அளவு ரூ. 59,550 கோடியாக இருந்தது. இதுநாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 2.64 சதவீதமாகும். ரூபாயின் மதிப்பில் இது கடந்த ஆண்டைவிட 24 சதவீதம் அதிகம். டாலர் மதிப்பில் பார்த்தால் 30 சதவீதம் அதிகம்.
சாப்ட்வேர் ஏற்றுமதி மற்றும் சர்வீசஸ் துறையில் தமிழகம் பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது.குறிப்பாக வங்கி, நிதி நிறுவனங்கள், காப்பீடுக் கழகங்களுக்கான சாப்ட்வேர்கள் எழுதுவது, அந்தத்துறைகளுக்கான சேவைகள் வழங்குவது, பிபிஓ ஆகிய துறைகளில் நாட்டில் தமிழகம் முக்கியஇடத்தில் உள்ளது.
தமிழகத்தில் சாப்ட்வேர் துறையை சென்னையை மட்டும் மையமாக வைத்து இல்லாமல் மாநிலம்முழுவதுக்கும் பரவச் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக கோவை, திருச்சி, மதுரை,திருநெல்வேலி ஆகிய நகர்களிலும் சாப்ட்வேர் பார்க்குகள் உருவாக்கப்படும்.
ஆப்டிகல் பைபர் பிராண்ட் பேண்ட் தொலைத் தொடர்பு வசதிகளும் உருவாக்கித் தரப்படும் என்றார்.
தமிழக சாப்ட்வேர் ஏற்றுமதி:
இந் நிலையில் சட்டமன்றத்தில் பேசிய மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,
கடந்த திமுக ஆட்சியின்போது, 1996-2001ம் கால கட்டத்தில், தமிழகத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ.6,830 கோடியாக இருந்தது. இப்போது எங்கள் ஆட்சியில் அது ரூ. 19,167 கோடியாகஉயர்ந்துள்ளது.
திமுக ஆட்சியில் சாப்ட்வேர் துறையில் 60,000 வேலை வாய்ப்புக்கள் தான் உருவாக்கப்பட்டன.அதிமுக ஆட்சியில் இப்போது 1.66 லட்சம் பேர் இத் துறையில் உள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications