கைரேகையுடன் கூடிய அமெரிக்க விசாக்கள்
சென்னை:
அமெரிக்க தூதகரத்தில் இன்று கைரேகை பதிவு செய்த விசாக்கள் வழங்கும் பணி தொடங்கியது.
அமெரிக்காவுக்கு செல்ல விரும்புவோருக்கு விசா வழங்கப்படும்போது அவர்களது கைரேகையும் பெறப்படும்என புதிதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி கைரேகை பதிவு செய்யப்பட்ட விசாக்கள் வழங்கும் பணி இன்று சென்னையில் உள்ள அமெரிக்கதுணைத் தூதரகத்தில் தொடங்கியது. இந் நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, நடிகை த்ரிஷா,இசையமைப்பாளர்கள் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, கிரிக்கெட் வீரர் வெங்கடேச பிரசாத் ஆகியோர்கலந்து கொண்டு கைரேகை பதிவு செய்யப்பட்ட விசாக்களைப் பெற்றுக் கொண்டனர்.
விசா பெற்றுக் கொண்ட பின்னர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், குற்றவாளிகள் மட்டும்தான்கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்பதில்லை. நல்லவர்களை அடையாளம் காட்டும் வகையில் இங்குகைரேகை பெறுகிறார்கள் என்றார்.