திருப்பதியில் ப்ரீ பெய்ட் டாக்ஸிகள் அறிமுகம்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
பக்தர்களின் வசதிக்காக திருப்பதி ரயில் நிலையத்தில் முன் கூட்டியே கட்டணம் செலுத்தும் ப்ரீ பெய்ட் டாக்ஸிகள்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
திருமலை கோவிலுக்குச் செல்ல டாக்ஸி ஓட்டுனர்கள் அநியாய கட்டணம் வசூலித்து பக்தர்களை நொகடிப்பதைத்தவிர்க்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
ரயில் நிலைய வாயிலில் அமைக்கப்படவுள்ள கவுண்டரில் செல்ல வேண்டிய இடம், லக்கேஜ் விவரங்களைச்சொல்லி கட்டணத்தைச் செலுத்தினால், அவர்களுக்கான டாக்ஸி ஒதுக்கப்படும்.
இந்தப் பணியில் போக்குவரத்துத்துறை போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த டாக்ஸி டிரைவர்கள் அதிகபணம் கேட்டு தொல்லை கொடுத்தால், அது குறித்து புகார் செய்ய ஹெல்ப் லைன் தொலைபேசியும்நிறுவப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications