காளிமுத்து மீது ஆளுநரிடம் எதிர்கட்சிகள் புகார்
சென்னை:
சட்டசபையில் பொய்யான தகவல்களைத் தந்து வருவதாக நிதியமைச்சர் பொன்னையன் மீதும், கருணாநிதி மீது கொண்டுவரப்பட்டுள்ள உரிமை மீறல் பிரச்சனை தொடர்பாக யாரும் வெளியில் விவாதிக்கவோ, பிரசுரிக்கவோ கூடாது என்று சபாநாயகர்காளிமுத்து விதித்துள்ள தடையை எதிர்த்தும் ஆளுநர் ராம் மோகன் ராவிடம் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக்கூட்டணிக் கட்சிகள் நாளை மனு கொடுக்கவுள்ளன.
மேலும் விவாதம் நடத்தாமல் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்றும் அவருக்குக்கோரிக்கை விடுக்கவுள்ளன.
இது தொடர்பாக கூட்டணிக் கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
சட்டசபையில் நிதியமைச்சர் பொன்னையன் பொய்யான தகவல்களைக் கூறி வருகிறார். மேலும், திமுக தலைவர் கருணாநிதிமீதான உரிமை மீறல் பிரச்சினை தொடர்பாக சட்டசபைக்கு வெளியே கருத்து தெரிவிக்கவோ, பத்திரிகைகளில் எழுதவோ கூடாதுஎன்றும் தன்னிச்சையாக சபாநாயகர் காளிமுத்து அறிவித்துள்ளார்.
இது தொடர்பாகவும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர் குலைவு குறித்தும் நாளை காலை 11.45 மணிக்கு ஆளுநர் ராம்மோகன் ராவிடம் புகார் கொடுக்க ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொன்னையன் தெரிவித்து தவறான கருத்துக்கள் குறித்தும் புகார் கொடுக்கப்படும்.
கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்று ஆளுநரை சந்தித்து மனுஅளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம்,
தமிழக சட்டமன்றம் அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படவில்லை. சட்டமன்ற விதிகளுக்கு உட்பட்டும்செயல்படவில்லை. இதனால் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட எந்த சட்ட மசோதாவுக்கும் அனுமதி தரக்கூடாது என ஆளுநரிடம் நாளை கோரிக்கை வைப்போம்.
நாளை காங்கிரஸ் திமுக, பா.ம.க., இடதுசாரிக் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்துப் பேசவுள்ளோம். இந்த அரசைக்கலைக்க கோர மாட்டோம். திருத்தக் கோருவோம்.
சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு மக்களைச் சந்திக்க, முதல்வர் ஜெயலலிதாவுக்கு தைரியம் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன் என்றார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தங்கம் விலை இன்று சரிந்தது.. சவரனுக்கு ரூ.800 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் ரேட் என்ன? -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
திநகர் தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நான் பிரச்சாரம் செய்கிறேனா? எம்எல்ஏ கருணாநிதி விளக்கம் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ












Click it and Unblock the Notifications