பெட்ரோல், டீஸல் விலை மீண்டும் உயர்கிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வரும் ஆகஸ்ட் 1ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 57 பைசாவும், டீஸல் விலை லிட்டருக்கு 92 பைசாவும் உயர்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா பொருட்களின் விலை உயர்வைப் பொறுத்து இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை 10சதவீதம் வரை அதிகரித்துக் கொள்ள பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும் விலை உயர்வுக்கு மத்திய அரசு ஒரு கட்டுப்பாடு விதித்தது. அதன்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கடந்த 3மாதங்களில் ஏற்பட்ட விலை உயர்வின் சராசரியையும், கடந்த ஒரு வருடத்தில் ஏற்பட்ட விலை உயர்வின் சராசரியையும்கணக்கில் கொண்டு அதில், 10 சதவீதத்தை வரை விலையை உயர்த்தலாம்.
இந்த கணக்கீட்டின்படி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு முறையே 57 பைசாவும், 92பைசாவும் உயர்கிறது.












Click it and Unblock the Notifications