தேர்வெழுத தடை: மாணவன் தற்கொலை
காஞ்சிபுரம்:
தேர்வு எழுத தலைமை ஆசிரியை தடை விதித்ததால், விரக்தி அடைந்த 12 வயது மாணவன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரைச் சேர்ந்தவர் சரத்குமார். அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். தன்னுடன்படிக்கும் மணிகண்டன் என்ற மாணவனுடன் சரத்குமார் சண்டை போட்டுள்ளார். அப்போது மணிகண்டனின் கையில் காயம்ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சரத்குமாரை திட்டிய தலைமை ஆசிரியை குப்புலட்சுமி, பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். மேலும், அன்றுநடந்த பரீட்சையிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று சரத்குமாருக்குத் தடை விதித்துள்ளார்.
பெற்றோருக்குத் தெரிந்தால் கடுமையாக தண்டிப்பார்களே என்று பயந்த சரத்குமார், தலைமை ஆசிரியையிடம் தேர்வெழுதஅனுமதிக்குமாறு கெஞ்சியுள்ளார், காலில் விழுந்தும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் ஆசிரியை குப்புலட்சுமி தனது முடிவில்தீர்மானமாக இருந்தார் என்று தெரிகிறது.
இதையடுத்து வீட்டுக்கு வந்த சரத்குமார் அங்கு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications