தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ள: பாஜக
திருச்சி:
தமிழகத்தில் கொலை, கொள்ளை முதலான குற்றங்கள் அதிகரித்திருப்பது உண்மை தான் என்று அகில இந்தியபாஜக பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவது உண்மைதான். இதுகுறித்த கவலைஅனைவருக்கும் இருக்கிறது. ஆனால் அதை அரசியலாக்க முயல்வது நல்லதல்ல. இந்த குற்றச் சம்பவங்களைகண்டுபிடிக்க கூடிய திறமை தமிழக காவல்துறைக்கு இருக்கிறது.
முத்திரைத்தாள் மோசடியில் கைது செய்யப்பட்ட தெல்கியிடம் 20 கோடி ரூபாய் வாங்கியது தொடர்பாகபகிரங்கமாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்றுசொல்லப்படுகிறவர்கள் மெளனம் சாதிக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் சிபிஐ எந்தவித வற்புறுத்தலுக்கும் படியாமல் நடுநிலையோடு செயல்பட்டு உண்மையைகண்டறிந்து குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
சட்டசபை நாட்களை குறைத்ததினால் மக்கள் பிரச்சினைகளை அரசுக்கு எடுத்துரைக்க எம்.எல்.ஏ.க்களுக்குவாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இதற்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கண்டுபிடித்துநடவடிக்கை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications