தலைமை நீதிபதி ரெட்டிக்கு கொலை மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு கூடுதல் மாவட்டங்கள், ரிட் மனு அதிகாரம் ஆகியவற்றை வழங்கியதற்காகசுபாஷன் ரெட்டி மீது உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ரெட்டியை இடமாற்றம் செய்ய வேண்டும், அவரது வழக்குகளை புறக்கணிப்போம் எனவும் பிடிவாதமாக கூறிஉண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

மேலும் மதுரை நீதிமன்றத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இந் நிலையில் சுபாஷன் ரெட்டிக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. ஜூலை 7ம் தேதி வந்துள்ள இந்தக்கடிதத்தில், 10 நாட்களில் நீங்கள் கொல்லப்படுவீர்கள். உங்களது நாட்கள் எண்ணப்படுகின்றன. முடிந்தால் தமிழககாவல்துறையின் உதவியுடன் உயிர் தப்பிக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கடிதத்தின் முடிவில் ஒரு வாகனத்தின் எண் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக் கடிதத்தை காவல்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ளார் சுபாஷன் ரெட்டி. மேலும், உயர் நீதிமன்ற காவல்நிலையத்தில் இதுதொடர்பாக எப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசாரின் விசாரணையில், கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வாகன எண், ஒரு யமஹா பைக்கின் எண் எனத்தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+