வழக்கறிஞர்-கள் போராட்டம் நடத்த திடீர் தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற போராட்டங்களை நடத்த சென்னைஉயர் நீதிமன்றம் திடீர் தடை விதித்துள்ளது.

இந்த உத்தரவின்படி, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் போராட்டங்களில்ஈடுபடக் கூடாது.

உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், -முற்றுகை, மறியல் போன்றவை நீதிமன்ற வளாகங்களில் தடை செய்யப்படுகிறது.உயர்நீதிமன்ற வளாகத்திலும், பிற நீதிமன்றங்களின் வளாகங்களிலும் ஊர்வலங்கள் -நடத்தவும் தடைவிதிக்கப்படுகிறது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள், பிற நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறாகப் பேசவோ, அவர்கள் மீது ஊழல் புகார்கள்கூறவோ வழக்கறிஞர்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

இந்த தடையுத்தரவை மீறும் வழக்கறிஞர்கள் ஒரு ஆண்டுக்கு வழக்குகளில் ஆஜராக தடை விதிக்கப்படும் என்றுபுதிய உத்தரவில் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதுரை உயர்நீதிமன்றக் கிளை விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அடிக்கடிபோராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு பெரும் இடையூறு விளைவித்து வரும் -நிலையில் இந்த புதிய தடை உத்தரவுபோடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+