ஆடி பெருக்குக்கு வந்த புதுமாப்பிள்ளை விபத்தில் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
ஆடிப் பெருக்கு விழாவில் கலந்து கொள்வதற்காக சீர்காழிக்கு வந்த, திருமணமாகி 2 மாதமே ஆன புது மாப்பிள்ளை சாலை விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கும், நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொள்ளிடத்தைச் சேர்ந்த பிரியா என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஆடிப் பெருக்கு விழாவையொட்டி மனைவியுடன் வெங்கடேசன் கொள்ளிடம் வந்தார். பின்னர் மாலையில், தனது உறவினர் ஒருவரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வெங்கடேசன் கிளம்பிச் சென்றார்.
சீர்காழியில் உள்ள தைக்கால் என்ற இடத்தில் அவர் வந்தபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வெங்கடேசன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.












Click it and Unblock the Notifications