குழந்தைகளை அள்ளி சென்ற 650 ஆட்டோக்கள்
சென்னை:
சென்னையில் 3 குழந்தைகளுக்கு மேல் ஏற்றிய 650 ஆட்டோக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சென்னை போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் ரவி நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளி மாணவ,- மாணவிகள் அதிக அளவில் ஆட்டோ மற்றும் ரிக்ஷாக்களில் ஏற்றி செல்லப்படுகிறார்கள்.இதனால் விபத்து ஏற்படும்போது அதிக உயிர்ச் சேதம் ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்கும் வகையில் சென்னையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த 2 நாட்களில்சென்னையில் 650 ஆட்டோ உள்பட 750 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சில பள்ளி வேன்களிலேயே அதிக அளவு மாணவர்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள்நடைபெறாமல் இருக்க பள்ளி தாளாளர்களிடம் எழுத்துபூர்வமான கையெழுத்து வாங்கி உள்ளோம்.
இதை மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு ஆட்டோவில் 3 குழந்தைகளும்,அவர்களுக்கு பாதுகாப்பாக ஒரு பெரிவரும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இது சைக்கிள் ரிக்ஷாவுக்கும்பொருந்தும்.
ஆட்டோ மற்றும் சைக்கிள் ரிக்ஷாவில் குழந்தையுடன் பெரியவர்கள் யாரும் வராதபோது, ஏதாவது அசம்பாவிதம்ஏற்பட்டால் வாகன ஓட்டிகளே பொறுப்பாவார்கள். அதேபோல் மாணவர்களை வீட்டில் விடும்போது அவர்கள்பத்திரமாக இறங்கிய பின்னரே ஆட்டோ ஓட்டுநர் வண்டியை எடுக்க வேண்டும். இந்த விதிமுறைகளைமீறுபவர்கள் மீது போக்குவரத்து காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications