பாஜகவை நம்ப முடியாது: கருணாநிதி
சென்னை:
இந்துத்வா விஷயத்தில் பாஜகவை நம்பவே முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேர்தல் தோல்விக்குப் பின் கோவாவில் கூடிய பாஜக தலைவர்களின் கூட்டத்தில், இந்துத்வாவுக்கு உயிர் கொடுக்கமுடிவெடுத்தனர். இதற்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ், சரத் யாதவ் ஆகியோரின் கூட்டணிக் கட்சியினர் எதிர்ப்புதெரிவித்தனர். தெலுங்கு தேசமும் எதிர்த்தது.
இதனால், குலை நடுங்கிப் போன பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி கலைந்து போகாமல் தடுக்க இந்துத்வாவைகை கழுவுவதாகக் கூறியுள்ளது.
இந்துத்வாவை கைவிடுவதாக பாஜக சொல்லும்போதெல்லாம், அக் கட்சியின் முன்னணி தலைவர்களானவெங்கையா நாயுடு போன்றவர்கள், தேவைப்படும் போது இந்துத்வா முழக்கம் செய்யத் தவற மாட்டோம் என்றுசொல்லத் தவறியதில்லை. இந்துத்வாவுக்கு புதிய விளக்கம் அளிக்கவும் தவறுவதில்லை.
இந்துத்வாவை பாஜக கைவிடாது என்று கடந்த ஜூன் மாதம் பேட்டியளித்த வெங்கையா நாயுடு நேற்று அளித்தபேட்டிக்கு பத்திரிக்கைகள் கொடுத்த தலைப்பே "இந்துத்வாவை கை கழுவுகிறது பாஜக என்பதுதான்.
புகை பிடித்தால் புற்றுநோய் வரும் என்று எச்சரிக்கும்போதெல்லாம் ஒருவன் நான் புகைப்பதை விட்டுவிட்டேன்என்றான். எப்படி அது உனக்குச் சாத்யமாயிற்று? என்று கேட்டால், புகை பிடிப்பதை நான் பலமுறை கைவிட்டிருக்கிறேன். அதனால் இது ஒன்றும் பிரமாதமில்லை என்றான். பாஜக இந்துத்வா பிரசாரத்தைவிட்டுவிட்டோம் என்று கூறுவதும் இதுபோலத்தான்.
1999ல் இந்துத்வா இல்லை என்றார்கள். நேற்று உண்டு என்றனர். இன்று தலை நீட்டிப் பார்க்கின்றனர். நிலைப்படிஇடித்ததும் தலையைக் குனிந்து கொள்வது போல குனிந்து கொள்கின்றனர். இவர்களை நம்ப முடியாது. மீண்டும்தலையை நீட்டுவார்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications