For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மறுமலர்ச்சி பயணம்: நெல்லையில் தொடங்கினார் வைகோ

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

மறுமலர்ச்சி பயணம் என்று பெயரிடப்பட்டுள்ள 45 நாள் நடை பயணத்தை திருநெல்வேலியில் இன்று காலைதொடங்கினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

நெல்லையிலிருந்து சென்னை வரையிலான இந்த நடைப் பயணத்தில் வைகோவுடன் 3,000 மதிமுகதொண்டர்களும் கலந்து கொள்கின்றனர். சுமார் 1,025 கிலோமீட்டர் தொலைவுக்கு நடக்கவுள்ள வைகோ,அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி சென்னைத் தீவுத் திடலில் தனது பயணத்தை நிறைவுசெய்யவுள்ளார்.

புதன்கிழமை சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்குச் சென்று தாயார் மாரியம்மாளிடம் ஆசிபெற்ற வைகோ பின்னர்நெல்லை சென்றார். அங்கு கட்சிப் பிரமுகர்களுடன் பயணம் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர்நடைப்பயணத்தில் பங்கேற்கவுள்ள தொண்டர்களுக்கு கைப்பை, சீருடைகள், தொப்பி, செருப்பு உள்ளிட்டவைவழங்கப்பட்டன.

இன்று காலை 8 மணிக்கு நெல்லை டவுன் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு வைகோ மாலை அணிவித்தார்.பின்னர் சீருடை அணிந்த தொண்டர்கள் புடை சூழ தனது நடைப் பயணத்தை தொடங்கினார்.

வைகோவின் நடைப்பயணம் வெற்றி பெற பல்வேறு தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X