போராட்டத்தை வாபஸ் பெற வழக்கறிஞர்கள் மறுப்பு
சென்னை:
வழக்கறிஞர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை வாபஸ் பெறும் வரை தங்களது போராட்டத்தைவிலக்கிக் கொள்ளப் போவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.
நீதிமன்றப் புறக்கணிப்பு செய்யக் கூடாது, நீதிபதிகள் குறித்து அவதூறாகப் பேசவோ, புகார் கூறவோ கூடாது,நீதிமன்ற வளாகங்களில் போராட்டங்கள் நடத்தக் கூடாது என்பது உள்ளிட்ட 25 புதிய கட்டுப்பாடுகளை விதித்துதமிழ்நாடு வழக்கறிஞர் சட்டத்தில் உயர்நீதிமன்றம் சமீபத்தில் புதிய திருத்தம் கொண்டு வந்தது.
இதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றவழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பில் இறங்கியுள்ளனர்.
இதையடுத்து தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியுடன் நீதிபதிகள் குழு ஆலோசனை நடத்தியது. இதையடுத்துபுதிய கட்டுப்பாடுகள் குறித்து ஆராய நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட குழு அமைக்கப்படுவதாகவும்,அந்தக் குழுவின் முடிவு வரும் வரை கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதை நிறுத்திவைப்பதாகவும் தலைமை நீதிபதிசுபாஷன் ரெட்டி அறிவித்தார்.
அவரது அறிவிப்பு குறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது. அதன்பின்னர் சங்கத் தலைவர் பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிய கட்டுப்பாடுகளை தற்காலிகமாகநிறுத்தி வைப்பதாகத்தான் அறிவித்துள்ளனர்.
ஆனால் புதிய சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என்றுபிரபாகரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications