குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை!
Subscribe to Oneindia Tamil
தென்காசி:
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள அனைத்துஅருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து கன மழை பெய்து வருவதாலும், அருவிகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் கொட்டுவதாலும்,அணைகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் பெரும் சப்தத்துடன் தண்ணீர்கொட்டுகிறது. குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் அருவிகளில் நீராட ஆசையுடன் வந்த சுற்றுலா பயணிகள்,பேரிரைச்சைலுடன் கொட்டும் தண்ணீரை மிரட்சியுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications