For Daily Alerts
Just In
மதுரை அருகே பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு
மதுரை:
மதுரையிலிருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்த பாஸஞ்சர் ரயில், டிரைவரின் சாதுர்யத்தால்,பெரும் விபத்திலிருந்து தப்பியது.
திருப்பரங்குன்றத்தைத் தாண்டி ரயில் சென்று கொண்டிருந்தபோது, தூரத்தில் தண்டவளாகத்தில்பிஷ்-பிளேட்டுகள் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார் ரயிலின் டிரைவர்.
(தண்டவாளத்தையும், சிமெண்ட் ஸ்லீப்பர் பிளாக்குகளையும் இணைக்கும் இரும்புகள் தான்பிஷ்-பிளேட்டுகள்)
இதையடுத்து ரயிலை அவசர பிரேக் போட்டு நிறுத்தினார். இதனால் பெரும் விபத்திலிருந்து ரயில்தப்பியுள்ளது.
உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தரப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து செப்பனிடும் பணியைஉடனே மேற்கொண்டனர். இதையடுத்து 45 நிமிடஙகள் தாமதமாக அந்த ரயில் புறப்பட்டுச்சென்றது.
Comments
Story first published: Thursday, August 5, 2004, 5:30 [IST]