For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1,000 கி.மீ. நடைபயணத்தை தொடங்கினார் வைகோ

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

மறுமலர்ச்சி பயணம் என்று பெயரிடப்பட்டுள்ள 45 நாள் நடை பயணத்தை திருநெல்வேலியில் இன்று காலைதொடங்கினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

நெல்லையிலிருந்து சென்னை வரையிலான இந்த நடைப் பயணத்தில் வைகோவுடன் 3,000 மதிமுகதொண்டர்களும் கலந்து கொள்கின்றனர். சுமார் 1,025 கிலோமீட்டர் தொலைவுக்கு நடக்கவுள்ள வைகோ,அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி சென்னைத் தீவுத் திடலில் தனது பயணத்தை நிறைவுசெய்யவுள்ளார்.

புதன்கிழமை சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்குச் சென்று தாயார் மாரியம்மாளிடம் ஆசிபெற்ற வைகோ பின்னர்நெல்லை சென்றார். அங்கு கட்சிப் பிரமுகர்களுடன் பயணம் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர்நடைப்பயணத்தில் பங்கேற்கவுள்ள தொண்டர்களுக்கு கைப்பை, சீருடைகள், தொப்பி, செருப்பு உள்ளிட்டவைவழங்கப்பட்டன.

இன்று காலை 8 மணிக்கு நெல்லை டவுன் பகுதியில் உள்ள காந்தி சிலை அருகே வைகோவும் தொண்டர்களும்கூடினர்.

வைகோவுக்கு மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், இந்திய கம்யூனிஸ்ட்கட்சி எம்.எல்.ஏ. அப்பாதுரை, முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, மதிமுக அவைத் தலைவர்எல்.கணேசன், கலைப்புலி தாணு உள்ளிட்டோர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வைகோ தனது பயணத்தைத் துவக்கினார்.அவரைத் தொடர்ந்து 3,000 தொண்டர்களும் வரிசையாக, வரிசைக்கு மூன்று பேராக அணிவகுத்துச் செல்கின்றனர். வழியில் அண்ணா, அம்பேத்கர் சிலைகளுக்கு வைகோ மாலைஅணிவித்தார்.

சாலையின் இரு பக்கமும ஏராளமான மக்கள் கூடி நின்று வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தாழையூத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்த வைகோவும் தொண்டர்களும் மாலைகங்கைகொண்டானில் தங்குகின்றனர். அங்கிருந்து நாளை காலை புறப்பட்டு வில்லிச்சேரி செல்லும்வைகோ நாளை இரவு அங்கு தங்குகிறார்.

வைகோவின் நடைப்பயணம் வெற்றி பெற பல்வேறு தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ஒருநாளைக்கு சராசரியாக 25 கி.மீ. தூரம் நடக்கவுள்ளார் வைகோ.

கடைசி நேரத்தில் கிடைத்த அனுமதி:

வைகோவின் நடை பயணத்துக்கு போலீசார் கடைசி நேரத்தில் தான் அனுமதி தந்தனர். அதுவும் பலவித நிபந்தனைகளுடன்.

நடை பயணம் குறித்து போலீஸ் தலைமையகத்துக்கு மதிமுக சார்பில் கடிதம் தரப்பட்டிருந்தது.வைகோவுடன் மைக், ஸ்பீக்கருடன் கூடிய வாகனம் செல்லவும் அனுமதி கோரப்பட்டிருந்தது.

ஆனால், நேற்றிரவு வரை போலீசாரின் எழுத்துப்பூர்வமான அனுமதி கிடைக்கவில்லை. அனுமதிகுறித்து மதிமுகவினரும் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. அனுமதி கிடைக்காவிட்டாலும் நடைபயணத்தைத் துவக்கிவிடும் முடிவில் இருந்தார் வைகோ.

இந் நிலையில் இரவோடு இரவாக நெல்லை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்துக்கு சென்னைகாவல்துறை டிஜிபி அலுவலகத்தில் இருந்து பேக்ஸ் அனுப்பப்பட்டது. அதில், போக்குவரத்துக்குஇடைஞ்சல் இல்லாமல் நடை பயணம் நடத்தலாம், வைகோவுடன் ஒரே ஒரு வாகனம் மட்டுமேமைக் கட்டி செல்லலாம் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் நடை பயணத்தைத் தொடர்ந்து செல்லலாம் என்றும்போலீஸ் தலைமையகம் அனுமதித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X