குடந்தை: தேவெ கெளடா வழுக்கி விழுந்து கால் முறிவு
கும்பகோணம்
கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கோவில்களில் சாமி கும்பிட வந்த முன்னாள் பிரதமர்தேவெ கெளடா ஹோட்டல் அறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு தேவெ கெளடா கும்பகோணம் வந்து சாமி கும்பிட்டு விட்டுச் சென்றார். அதன் பின்னர்தற்போது மீண்டும் வந்துள்ள அவர் குடந்தையில் உள்ள சக்கரபாணி, சாரங்கபாணி கோவில்களில் சாமிகும்பிட்டார். பின்னர் நாச்சியார் கோவிலில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலுக்கும் சென்று சாமி கும்பிட்டார்.
பின்னர் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றார். சிறிது நேரத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளிப்பதாகஇருந்தது. இந் நிலையில் ஹோட்டலில் தேவெ கெளடா வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு கால் முறிவுஏற்பட்டது.
வலி அதிகமாக இருப்பதால் அவரால் நிருபர்களைச் சந்திக்க முடியவில்லை என்று ஜனதா தள பிரமுகர்கள்தெரிவித்தனர்.
தேவெ கெளடா இன்று காலை சுவாமிமலை சென்று சுவாமிநாத சுவாமியை தரிசிக்கத் திட்டமிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications