For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு பணம் ஜெ. வீணடிப்பு: கருணாநிதி புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தின் நிதி நிலையை மோசமாக இருப்பதாகக் கூறிய ஆடிட்டர் ஜெனரலுக்கு பதில் தரும்வகையில் லட்சக்கணக்கான அரசுப் பணத்தை செலவழித்து பத்திரிக்கைகளில் முழு பக்கவிளம்பரங்கள் கொடுத்து, மக்கள் பணத்தை முதல்வர் ஜெயலலிதா வீணடித்துள்ளதாக திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக நிதி நிலை குறித்து ஆட்டிடர் ஜெனரலின் கருத்துக்களுக்கு பாயிண்ட்-பை- பாயிண்டாகவிளக்கம் தந்தும் சில பத்திரிக்கைகள் தவிர மற்றவற்றில் முழு பக்க விளம்பரங்கள் தரப்பட்டுள்ளன.முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் இந்த விளம்பரம் தரப்பட்டுள்ளது.

இது குறித்து கருணாநிதி கூறியிருப்பதாவது:

அடுத்த வீட்டுக்காரன் பொருளை எடுத்து, இன்னொரு வீட்டுக்காரனுக்குத் தருவது போல, தன்அரசுக்கு எதிராக ஆடிட்டர் ஜெனரல் புள்ளி விவரங்களுடன் எடுத்து வைத்த உண்மைகளைமறைக்கும் விதமாக, பத்திரிக்கைகளில் அரசின் செலவில் முழு பக்க விளம்பரம் தந்துள்ளார்ஜெயலலிதா.

இதற்காக அரசுப் பணம் ஏராளமான அளவில் வீணடிக்கப்பட்டுள்ளது. ஆடிட்டர் ஜெனரல் தவறானதகவல் தந்திருந்தால் அதை எத்தனையோ வழிகளில் மறுத்திருக்கலாம். தனது துறைகள் மூலமாகஅரசு விளக்க அறிக்கைகள் வெளியிட்டிருக்கலாம்.

அதை விட்டுவிட்டு அரசு பணத்தையே செலவழித்து அரசுக்கு எதிரான தகவல்களை மறைத்துள்ளார்ஜெயலலிதா.

புதிய வீராணம் திட்டம் நிறைவேற்றப்பட்டதால் தான் சென்னை காப்பாற்றப்பட்டது என்று காதில் பூசுற்றியிருக்கிறார் ஜெயலலிதா. அந்த ஏரியில் ஒரு சொட்டு நீர் இல்லை. அதிலிருந்து எப்படி தண்ணீர்வர முடியும்.

நெய்வேலியைச் சுற்றி 45 போர்வெல்களைப் போட்டு அதிலிருந்து நீரை லாரிகளில் ஏற்றிக்கொண்டுவந்துவிட்டு, வீராணத்தில் இருந்து தண்ணீர் வருவதாகக் கூறியிருக்கிறார்.

புதிய வீராணம் திட்டத்துக்கு செலவிடப்பட்ட பணம் அத்தனையும் வீணாகியுள்ளது.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X