இலங்கை: ஆளும் கூட்டணிக்கு புதிய தலைவர் நியமனம்
கொழும்பு:
இலங்கையில் ஆளும் கூட்டணிக்கு புதிய தலைவராக சுதந்திராக் கட்சியின் முன்னாள் தலைவரும், அமைச்சருமானரத்னஸ்ரீ விக்ரமநாயகே அறிவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணித் தலைவர் பதவியிலிருந்து சந்திரிகா விலகியதையடுத்து,புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து சந்திரிகாவின் கட்சிக்குள் போட்டி நிலவியது.
பிரதமர் மகிந்தா ராஜபக்சே, சந்திரிகாவின் சகோதரர் அனுரா பண்டாரநாயகே இருவரும் கூட்டணிக்குத் தலைமைதாங்க விரும்பினர். இதற்கிடையே கட்சிக்குள் வாக்கெடுப்பைத் தவிர்க்கும் வகையில், போட்டியின்றி ஒருவரைதேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கூட்டணியின் புதிய தலைவராக ரத்னஸ்ரீ விக்ரமநாயகே (71) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்தமாதம் கூடும் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கூட்டணியின் புதிய தலைவராக ரத்னஸ்ரீ விக்ரமநாயகேஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்.












Click it and Unblock the Notifications