தலைமுடியால் வந்த வினை !
காரைக்குடி:
காரைக்குடி அருகே சக மாணவர்கள் முன்னிலையில் தலை முடியை ஆசிரியர் வெட்டியதால் அவமானமடைந்தஇரண்டு மாணவர்கள் பூச்சி மருந்து குடித்தனர்.
கோட்டையூர் அருணாச்சல செட்டியார் அரசு உயர் நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருபவர்கள்கலையரசன், சின்னையா.
இருவரும் நீண்ட நாட்களாக முடி வெட்டாமல், பரட்டைத் தலையுடன் வகுப்புக்கு வந்தவண்ணம் இருந்தனர்.அவர்களை முடி வெட்டுமாறு ஆசிரியர் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.
இதனால் கோபமடைந்த ஆசிரியர் சுகுமார் கத்திரிக்கோலை வரவழைத்து மற்ற மாணவர்கள் முன் இநத்இருவரின் தலைடியையும் வெட்டியுள்ளார்.
இதனால் அவமானமடைந்த இருவரும் வீட்டுக்குச் சென்று பூச்சி மருந்தைக் குடித்தனர். பதறிப்போனகுடும்பத்தாரும், அக்கம்பக்கத்தினரும் இரு மாணவர்களையும் காரைக்குடிக்குக் கொண்டு சென்றுமருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் சுகுமார் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.--












Click it and Unblock the Notifications