கச்சத்தீவை மீட்க வேண்டும்: இல. கணேசன்
சென்னை:
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவத்ை தவிர்க்க, கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று அகில இந்திய பாஜகசெயலாளர் இல.கணேசன் கூறினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமு என்ற மீனவர் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால்சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது. இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை அரசு தொடர்ந்து இடைஞ்சல் கொடுத்து வருகிறது. இந்தியக் குடிமகன் ஒருவர்சுட்டுக்கொல்லப்பட்டது, இந்திய தேசத்துக்கு சவால் விடும் போக்கு என்று கருதி மத்திய அரசு இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும்.
இப் பிரச்சினைக்கு முக்கிய காரணம் கச்சத்தீவை விட்டுக் கொடுத்ததுதான். அந்தப் பகுதியில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமைஉண்டு என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் அந்த உரிமை வலியுறுத்தப்படவில்லை.
இப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும், அதுவரை அந்த கடல்பகுதியை பொதுப்பகுதியாக அறிவிக்கவேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய படுகொலை நடைபெறுவதை தடுக்க மத்திய அரசு விரைந்து செயலாற்ற வேண்டும் என்றுகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications