சதாமுக்காக வாதாட சென்னை வழக்கறிஞர்
சென்னை:
இராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்காக சென்னையைச் சேர்ந்த பிரபல மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்பக்தவச்சலம் ஆஜராகி வாதாடவுள்ளார்.
இராக் அதிபர் சதாம் உசேன் அமெரிக்க படையினரால் பிடிக்கப்பட்டு தற்போது இராக் இடைக்கால நிர்வாகத்திடம்ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் மீது மனித குலத்திற்கு எதிராக செயல்பட்டதாகவும், பல்வேறு இனப்படுகொலைகளை செய்ததாகவும், போர்க் குற்றம் புரிந்ததாகவும் அமெரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது.
சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் உசேன் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. இதில் சதாம்உசேனுக்காக வாதாட சர்வதேச அளவில் புகழ் பெற்ற வழக்கறிஞர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த ஆம்னெஸ்டி சர்வதேச அமைப்பும், சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞர்கள்குழுவும் சேர்ந்து சதாமுக்காக வாாதட உள்ளன.
இந்தக் குழுவில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பக்தவச்சலம் இடம் பெற்றுள்ளார். இவர் 1993ம் ஆண்டுசென்னையில் நடந்த வெடிகுண்டு வழக்கு, விடுதலைப் புலிகள் மீதான வழக்கு ஆகியவற்றில் ஆஜரானவர்.நக்ஸலைட்டுகளுக்கான சில வழக்குகளிலும் இவர் ஆஜராகியுள்ளார்.
சதாம் உசேனுக்காக ஆஜராவதில் பெருமைப்படுவதாக பக்தவச்சலம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்தெரிவிக்கையில், ஆம்னெஸ்டி அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ள கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர்நிரஞ்சன் ஹால்தார் மூலம் எனக்கு இந்தத் தகவல் கிடைத்துள்ளது.
எனது மகளான வழக்கறிஞர் அஜிதாவின் உதவியுடன் சதாம் வழக்கை நான் மேற்கொள்ளவுள்ளேன். விரைவில்சர்வதேச வழக்கறிஞர்கள் குழு கூடி பணிகள் குறித்து முடிவு செய்யவுள்ளது.
அமெரிக்காவின் அத்துமீறல்கள், அட்டூழியங்களை வெட்ட வெளிச்சமாக்குவதில் நான் மிகவும் ஆர்வமாகஉள்ளேன். உண்மையில் இராக்குக்கு பேரழிவு ஆயுதங்களை வழங்கியதே அமெரிக்காதான். ஈரானுக்குஎதிராகவும், குர்திஷ் இன மக்களுக்கு எதிராகவும் இராக் போரிடுவதற்காக பேரழிவு ஆயுதங்களைஅமெரிக்காதான் வழங்கியது. இதுதான் உண்மை.
சதாமுக்காக வாதாடப் போவதால் எனக்கு கொலை மிரட்டல்கள் கூட வரலாம். இருப்பினும் இதற்காக நான்அஞ்சப் போவதில்லை என்றார் பக்தவச்சலம்.
-
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்!












Click it and Unblock the Notifications