Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தின் எதிர்காலம் குறித்த கவலை நீங்கியது: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்குப் பிறகு மாநிலத்தின் எதிர்காலம் குறித்தமிகப் பெரிய மனச்சுமையை இறக்கி வைத்ததைப் போல உணருகிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் 3 நாள் மாநாட்டின் நிறைவு நாள் கூட்டம் சென்னைதலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் ஜெயலலிதா, செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:

அண்மைக் காலத்தில் தமிழகத்தின் எதிர்காலம் குறித்து அடிக்கடி நான் கவலைப்பட்டிருக்கிறேன். இந்தமாநாட்டுக்குப் பிறகு அந்த மனச்சுமையை இறக்கி வைத்ததைப் போல உணர்கிறேன்.

எல்லா ஆட்சியர்களிமும், காவல் துறை அதிகாரிகளிடமும் நேர்மையும், கடமை உணர்வும் வெளிப்படையாகவேதெரிந்தன.

மாநிலத்தின் நிதிநிலை இன்னும் முழுமையாகச் சீரடையவில்லை.

மாநிலத்தின் வளர்ச்சிக்காக இந்த மாநாட்டில் நிறைய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுக்குக்கூட இல்லை என்கிற பதிலைச் சொல்ல இயலாத அளவுக்குப் பிரச்சினைகளைப் புரிந்து, தங்களது உரைகளைஅதிகாரிகள் தயாரித்துக் கொண்டு வந்துள்ளனர்.

அவற்றில் சிலவற்றிற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளேன். இன்னும் பல கோரிக்கைகளைப் பரிசீலித்து, விரைவில்அறிவிப்பேன் என்று கூறினார் ஜெயலலிதா.

வெடிகுண்டுப் புரளி தொடர்பான கேள்விகளை நிருபர்கள் கேட்டபோது, மாவட்ட ஆட்சியர்கள் மாநாடுதொடர்பான விவரங்கள்தான் இப்போது முக்கியமானவை. மற்ற கேள்விகளுக்கு பின்னர் பதில் தரப்படும் என்றுஜெயலலிதா கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+