தமிழக அரசிடம் மத்திய அமைச்சர் விசாரணை
சென்னை:
மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய திட்டஅமலாக்கத்துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்ணான்டஸ் இன்று தமிழக அரசிடம் விசாரணை நடத்தினார்.
தென்சென்னை தொகுதி எம்.பி.யான டி.ஆர்.பாலு, தனது தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் வளர்ச்சிப்பணிகளுக்காக ஒதுக்கிய நிதியை மாநில அரசு புறக்கணித்து வருவதாக மத்திய அரசிடம் புகார் செய்திருந்தார்.
அது பற்றி விசாரிக்க ஆஸ்கர் பெர்னாண்டஸ் சென்னை வந்தார்.
தாம்பரத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க டி.ஆர்.பாலு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 2001ம்ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.30 லட்சம் ஒதுக்கினார். ஆனால் இதுவரை அந்தப் பணி நிறைவேற்றப்படவில்லை.
அந்த இடத்தை ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று பார்விையிட்டு, இன்னும் பணி தொடங்கப்படாதது குறித்துவைத்திலிங்கம் எல்.எல்.ஏ, நகர மன்ற தலைவர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோரிடம் விசாரமை நடத்தினார்.
இதுபோல் குரோம்பேட்டை பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடைக்கு டி.ஆர்.பாலு ஒதுக்கிய நிதிபயன்படுத்தாமல் இருப்பது குறித்தும் விசாரணை நடத்தினார்.
பின்னர் டி.ஆர்.பாலு தொகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேறு சில திட்டப்பணிகளையும் அமைச்சர்பெர்னாண்டஸ் பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications