தேசிய கொடி விவகாரம்: வெங்கையா மறுப்பு
சென்னை:
தேசியக் கொடியை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொள்ளவில்லை என்று பாஜக தலைவர் வெங்கையா நாயுடுகூறியுள்ளார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த சுதந்திர தினவிழாவின்போது, பாஜக சின்னம், வண்ணம் கொண்ட கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி கொடியைஅவமதித்து விட்டதாக வெங்கையா நாயுடு மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார்கொடுக்கப்பட்டுள்ளது.
இதை வெங்கையா நாயுடு மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொருஆண்டும் சுதந்திர தினத்தின்போது, கட்சிக் கொடியை எடுத்து விட்டு அதே கம்பத்தில், தேசியக் கொடியைஏற்றுவது வழக்கம்.
அதுபோலவே இந்த முறையும் நடந்துள்ளது. தேசியக் கொடியை அவமதிக்கும் எண்ணம் எனக்கு சிறிதும்கிடையாது. தேசியக் கொடி மீது அதிகபட்ச மதிப்பு வைத்துள்ளவன் நான். என் மீதான புகார் உள்நோக்கம்கொண்டது என்று வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.