கூச்சல், குழப்பம்: நாடாளுமன்றம் ஸ்தம்பிப்பு
டெல்லி:
அந்தமான் சிறையில் செதுக்கப்பட்டுள்ள வீர சாவர்க்கரின் இந்துத்துவக் கருத்துக்களை நீக்கிவிடுமாறு மத்தியபெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர அய்யர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி நாடாளுமன்றத்தில் இருஅவைகளிலும் சிவசேனை, பா.ஜ.க. எம்பிக்கள் பிரச்சனை எழுப்பினர்.
மணிசங்கர அய்யர் மன்னிப்பு கோர வேண்டும் என்று கேட்டு அவர்கள் கூச்சலிட்டனர். இதற்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சி உறுப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து சத்தமிட்டனர். இதனால் இரு அவைகளின்நடவடிக்கைகள் ஸ்தம்பித்துப் போயின.
இன்று அவைகள் கூடியதும், போர்ட் பிளேர் சிறையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவு கல்லில் விநாயக்தாமேதர் சவர்க்கரின் கருத்துக்களை அழிக்க பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர்உத்தரவிட்டுள்ளார். அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சி உறுப்பினர்கள் கோஷம்எழுப்பினர்.
கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு, இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று சிவசேனா உறுப்பினர்ஆனந்த் கீதே வலியுறுத்தினர். இதற்கு இன்று சபாநாயகர் பொறுப்பு வகிக்கும் துணை சபாநாயகர் சரண்ஜித் சிங்அத்வால் அனுமதி அளிக்கவில்லை.
இதனையடுத்து சிவசேனா உறுப்பினர்கள் மணிசங்கர் அய்யருக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும்கோஷம் எழுப்பினர். இதையடுத்து மக்களவையை 45 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக அத்வால் அறிவித்தார்.
அதே போல ராஜ்யசபாவிலும் இந்த விவகாரம் வெடித்ததால் அவை 40 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.