வெடிகுண்டுடன் பெண் உள்பட 10 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
மதுராந்தகரத்தில் பயங்கர ஆயுதங்கள், வெடிகுண்டுடன் பெண் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூணாம்பேடு காலனியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் இரு கோஷ்டியினர் இடையே மோதல் இருந்து வந்தது.இந் நிலையில் கடந்த சனிக்கிழமை ஒரு கோஷ்டி மீது இன்னொரு கோஷ்டி நடத்திய தாக்குதலில் ஒருவரது கை துண்டானது.
இதற்குப் பழிவாங்க அந்த கோஷ்டி வெடிகுண்டுகளுடன் தயாராகிக் கொண்டிருப்பதாக போலீசாருக்குத் தகவல்கிடைத்ததையடுத்து போலீஸ் படை அங்கு குவிக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
அப்போது வெடிகுண்டுடன் தமிழரசி (50) என்ற பெண் உள்பட 10 பேர் சிக்கினர். பயங்கர ஆயுதங்களுடன் இவர்கள்தாக்குதலுக்குத் தயாரான நிலையில் கைது செய்யப்பட்டனர். இதனால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக போலீசார்தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications