வி.சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கொலை

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அருகே விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் வெட்டிக்கொல்லப்பட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தக் கொலையைத்தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏவின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இங்கு பாலாற்றுப் பகுதியில் பலரும் ஆற்று மணலைத் திருடி விற்று வருகின்றனர். ஆற்றோரம்தோட்டம் வைத்திருக்கும் காளி (32) என்பவரும் திருட்டு மணல் வியாபாராத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந் நிலையில் சுரேஷ் என்பவரும் அதே பகுதியில் மணல் திருடி லாரிகளில் ஏற்றிச் சென்று விற்றுவந்தார். மணலைக் கொள்ளையடிப்பது தொடர்பாக காளிக்கும் சுரேசுக்கும் இடையே தகராறு இருந்துவந்துள்ளது.

இதில் காளிக்கு திருப்போரூர் அதிமுக எம்.எல்.ஏ. கனிதா சம்பத்தின் ஆதரவு இருந்துள்ளது. அவரதுஉதவியுடன் தான் காளி ஆற்று மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந் நிலையில் காளி மீது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்கோடீஸ்வரனிடம் சுரேஷ் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து காளியைச் சந்தித்துகோட்டீஸ்வரன் மிரட்டியுள்ளார்.

அப்போது ஏற்பட்ட மோதலில் காளியின் ஆட்கள், கோட்டீஸ்வரனையும் சுரேஷையும் மிகபயங்கரமான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அதில் படுகாயமடைந்த கோட்டீஸ்வரன் சென்னைமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதையடுத்து திருப்போரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். காளி மற்றும் அவரது சகோதரரின் வீடுகள் தாக்குதலுக்குஉள்ளாயின. அவர்களது வீடுகள் சூறையாடப்பட்டன. மேலும் பல வீடுகளுக்கும் தீவைக்கப்பட்டது.

எம்.எல்.ஏ. கனிதா சம்பத்தின் காரையும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் தீ வைத்துகொளுத்தினர்.

இப்போது தலைமறைவாகிவிட்ட காளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+