அடுத்த ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு
சென்னை:
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அடுத்த ஆண்டு வெளியாகும் என மத்தியநீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர அய்யரும் பிரியரஞ்சனும் தமிழக காவிரிப்பாசனப் பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். அப்போது தமிழக விவசாயிகளின் நிலை குறித்துஅய்யர் அவரிடம் விளக்கினார்.
இதன் பின்னர் சென்னை திரும்பிய பிரியரஞ்சன் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழக காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் மிக மிக மோசமாக உள்ளது. காவிரியில் கடந்த 3மாதங்களில் தமிழகத்துக்கு 137 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால்,மிகக் குறைவான நீர் தான் வந்துள்ளது.
1991ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இடைக்காலத் தீர்ப்பு முறையாகஅமல்படுத்தப்படவில்லை. 13 ஆண்டுகளாக தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்கவில்லை. இந்தமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அடுத்த ஆண்டு வெளி வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம்.
இடைக்கால தீர்ப்பை அமல்படுத்த முடியாததையே படிப்பினையாகக் கொண்டு, இறுதித் தீர்ப்பைநிச்சயமாக அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுப்போம். அதில் கவனமாகவும்இருப்போம். இதற்கான புதிய வரைமுறைகளை நீர்ப்பாசனத்துறை வகுக்கும்.
அடுத்த மாதம் 22ம் தேதி காவிரி கண்காணிப்புக் குழு டெல்லியில் கூடுகிறது என்றார் பிரியரஞ்சன்.
மணிசங்கர் அய்யர் கூறுகையில், கடந்த 13 வருடமாக எந்த நீர்ப்பாசன அமைச்சரும் தமிழகத்துக்குவந்து விவசாயிகள் பிரச்சனையை நேரில் கேட்டறியவில்லை. எனது வேண்டுகோளை ஏற்றுகாவிரி டெல்டாவுக்கு நேரில் வந்து நிலைமையை கண்டறிந்தார் முன்ஷி.
தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கவும் அவர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். காவிரி நதிநீர் கண்காணிப்புக் குழு அடுத்த மாதம் 22ம் தேதி தமிழகம் வரவுள்ளது என்றார்.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது












Click it and Unblock the Notifications