அடுத்த ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு
சென்னை:
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அடுத்த ஆண்டு வெளியாகும் என மத்தியநீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர அய்யரும் பிரியரஞ்சனும் தமிழக காவிரிப்பாசனப் பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். அப்போது தமிழக விவசாயிகளின் நிலை குறித்துஅய்யர் அவரிடம் விளக்கினார்.
இதன் பின்னர் சென்னை திரும்பிய பிரியரஞ்சன் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழக காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் மிக மிக மோசமாக உள்ளது. காவிரியில் கடந்த 3மாதங்களில் தமிழகத்துக்கு 137 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால்,மிகக் குறைவான நீர் தான் வந்துள்ளது.
1991ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இடைக்காலத் தீர்ப்பு முறையாகஅமல்படுத்தப்படவில்லை. 13 ஆண்டுகளாக தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்கவில்லை. இந்தமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அடுத்த ஆண்டு வெளி வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம்.
இடைக்கால தீர்ப்பை அமல்படுத்த முடியாததையே படிப்பினையாகக் கொண்டு, இறுதித் தீர்ப்பைநிச்சயமாக அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுப்போம். அதில் கவனமாகவும்இருப்போம். இதற்கான புதிய வரைமுறைகளை நீர்ப்பாசனத்துறை வகுக்கும்.
அடுத்த மாதம் 22ம் தேதி காவிரி கண்காணிப்புக் குழு டெல்லியில் கூடுகிறது என்றார் பிரியரஞ்சன்.
மணிசங்கர் அய்யர் கூறுகையில், கடந்த 13 வருடமாக எந்த நீர்ப்பாசன அமைச்சரும் தமிழகத்துக்குவந்து விவசாயிகள் பிரச்சனையை நேரில் கேட்டறியவில்லை. எனது வேண்டுகோளை ஏற்றுகாவிரி டெல்டாவுக்கு நேரில் வந்து நிலைமையை கண்டறிந்தார் முன்ஷி.
தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கவும் அவர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். காவிரி நதிநீர் கண்காணிப்புக் குழு அடுத்த மாதம் 22ம் தேதி தமிழகம் வரவுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications