கருணாநிதிக்கு எதிராக பாஜக போராட்டம்: ராஜா
டெல்லி:
ஊருக்கு உபதேசம் செய்வதை திமுக தலைவர் கருணாநிதி கைவிட வேண்டும் என பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.
தினந்தோறும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் பா.ஜ.க. முடக்கிவருவதாகவும், அதைக் கண்டித்து பா.ஜ.கவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என கருணாநிதிகூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
திமுக தலைவர் கருணாநிதி ஊருக்கு உபதேசம் செய்வதை நிறுத்திவிட்டு சேப்பாக்கம் தொகுதியில் அவருக்குவாக்களித்த மக்களுக்கு மரியாதை கொடுத்து சட்டமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
சட்டமன்றத்துக்குச் சென்று கடமையை ஆற்றாத கருணாநிதி, நாடாளுமன்றத்தைப் பற்றி பேசக் கூடாது.சட்டமன்றத்துக்கே போகாத கருணாநிதிக்கு, பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்த தகுதி இல்லை.
பாஜகவுக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தினால், நாங்கள் பதிலுக்கு கருணாநிதி சட்டசபைக்கு வர வேண்டும்அல்லது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி மாநிலம் தழுவிய போராட்டம்நடத்துவோம்.
கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் எறியும் வேலையை கருணாநிதி கைவிட வேண்டும்.
ஹூப்ளியில் பொது மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றியதற்காக உமா பாரதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கத்தூண்டியிருக்கிறார் சோனியா காந்தி. சோனியவையும அவரது ஆட்களையும அரசியல் களத்தில் இருந்துஅப்புறப்படுத்தும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளது என்று கூறியுள்ளார் ராஜா.












Click it and Unblock the Notifications