பி.இ. மாணவர்களுக்கு கேம்ப்ரிட்ஜ் ஆங்கில கல்வி
சென்னை:
தமிழக பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் ஆங்கிலப் பேச்சுத் திறனை அதிகரிக்க, இங்கிலாந்தின்கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக ஆங்கில சான்றிதழ் பட்டயப் படிப்பு தமிழக பொறியியல் கல்லூரிகளில்அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதற்கான ஒப்பந்தம் இன்று முதல்வர் ஜெயலலிதாவின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழக தொழில்நுட்பக்கல்வித்துறை இயக்குனர் பிரபாகர், பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் பண்ணாட்டுத் துறைச் செயலாளர் யூனிஸ் குரூக்ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அப்போது தென் இந்தியாவிற்கான பிரிட்டிஷ் துணைத் தூதர் ஸ்டூவர்ட் இன்னாசும் உடனிருந்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
தமிழக மாணவர்கள் தொழில்நுட்பத் திறனிலும், கல்வியிலும் மிகச் சிறந்து விளங்கினாலும் ஆங்கிலத்தில்சரளமாகப் பேசும் விஷயத்திலும், தன்னம்பிக்கையிலும் இன்னும் பின் தங்கியே உள்ளனர்.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தொழில் மையங்களை உருவாக்கி வரும் நிலையில்மாணவர்களின் இந்தக் குறைபாட்டைக் களையவும், சர்வதேச அளவில் வேலை வாய்ப்புக்களில் பிறமாணவர்களுடன் போட்டியிடும் வகையிலும், தமிழக பொறியியல் கல்லூரி மாணவர்களின் ஆங்கிலத் திறனைஅதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதன்படி தமிழக பொறியியல் கல்லூரிகளில் வர்த்தக ஆங்கில சான்றிதழ் கல்வியை அறிமுகப்படுத்த முடிவுசெய்யப்பட்டது. இதற்காக உலகப் புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆங்கில வகுப்புகளை கேம்ப்ரிட்ஜ்பல்கலைக்கழகம் நடத்தும். இந்தக் கல்விக்கான பாடங்கள், புத்தகங்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சியை பிரிட்டிஷ்கவுன்சிலே ஏற்பாடு செய்யும்.
பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் 3 மாதம் இந்தப் பயிற்சி தரப்படும். இதன் பிறகு நடத்தப்படும் தேர்வில்வெற்றி பெறுவோருக்கு கேம்ப்ரிட் பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் உலகஅளவில் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் 12,000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வர்த்தக ஆங்கிலக்கல்வியை எந்தெந்த கல்லூரிகளில் அறிமுகப்படுத்துவது என்பதை தமிழக தொழில்நுட்பக் கல்வித்துறை முடிவுசெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வேலூர், ராணிப்பேட்டைக்கு ஹை அலர்ட்! உஷாரா இருங்க மக்களே! வானிலை மையம் வார்னிங் -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
அதிமுகவுக்கு தொடரும் தோல்வி.. ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வர்.. சபதமெடுத்த ஓ.பன்னீர்செல்வம் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
காலியாக போகும் காவிரி.. வேலையை காட்டும் வெயில்! இந்த வருஷம் சம்பவம் இருக்கு! வெதர்மேன் வார்னிங்! -
செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூர் உட்பட 3 மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்தது! ஆட்டம் தொடங்கியாச்சு! -
நீலகிரியில் தமிழக பகுதிக்கு உரிமைக் கொண்டாடும் கேரளம்! எல்லையில் பதற்றம்! தவாக வேல்முருகன் கண்டனம்












Click it and Unblock the Notifications